என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ‘சந்திரயான்-2’ விண்கலம் அடுத்த வாரம் விண்ணில் ஏவப்படும்
Byமாலை மலர்18 July 2019 1:11 AM GMT (Updated: 18 July 2019 1:11 AM GMT)
கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ‘சந்திரயான்-2’ விண்கலம் அடுத்த வாரம் விண்ணில் ஏவப்படும்; நிலவின் தென் துருவ பகுதியில் இது ஆராய்ச்சி நடத்தும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை:
நிலவின் தென் துருவ பகுதியில் ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘இஸ்ரோ’ மேற்கொண்டுள்ள கனவு திட்டம், ‘சந்திரயான்-2’ ஆகும்.
இந்த ‘சந்திரயான்-2’ விண்கலத்தை ‘ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3’ ராக்கெட் மூலம் கடந்த 15-ந் தேதி அதிகாலை 2.51 மணிக்கு சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
இந்த நிலையில் திடீரென அதிகாலை 1.50 மணிக்கு தொழில்நுட்ப காரணங்களால் ‘சந்திரயான்-2’ விண்கலத்தை விண்ணில் செலுத்துவது நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ராக்கெட்டில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறை விஞ்ஞானிகளும், என்ஜினீயர்களும் இணைந்து பணியாற்றி சரி செய்து விட்டதாக ‘இஸ்ரோ’ வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையடுத்து ‘சந்திரயான்-2’ விண்கலத்தை ‘ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3’ ராக்கெட் மூலம் அடுத்த வாரம் (20-ந் தேதி முதல் 23-ந் தேதிக்குள் ஒரு நாளில்) விண்ணில் செலுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறின.
நிலவின் தென் துருவ பகுதியில் ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘இஸ்ரோ’ மேற்கொண்டுள்ள கனவு திட்டம், ‘சந்திரயான்-2’ ஆகும்.
இந்த ‘சந்திரயான்-2’ விண்கலத்தை ‘ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3’ ராக்கெட் மூலம் கடந்த 15-ந் தேதி அதிகாலை 2.51 மணிக்கு சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
இந்த நிலையில் திடீரென அதிகாலை 1.50 மணிக்கு தொழில்நுட்ப காரணங்களால் ‘சந்திரயான்-2’ விண்கலத்தை விண்ணில் செலுத்துவது நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ராக்கெட்டில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறை விஞ்ஞானிகளும், என்ஜினீயர்களும் இணைந்து பணியாற்றி சரி செய்து விட்டதாக ‘இஸ்ரோ’ வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையடுத்து ‘சந்திரயான்-2’ விண்கலத்தை ‘ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3’ ராக்கெட் மூலம் அடுத்த வாரம் (20-ந் தேதி முதல் 23-ந் தேதிக்குள் ஒரு நாளில்) விண்ணில் செலுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறின.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X