என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பழனி கொத்தனார் கொலையில் 3 பேர் கைது
Byமாலை மலர்17 July 2019 11:02 AM GMT (Updated: 17 July 2019 11:02 AM GMT)
பழனி கொத்தனார் கொலை வழக்கில் 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி:
பழனி அருகே உள்ள சிவகிரிப்பட்டியைச் சேர்ந்த முனியாண்டி மகன் சிலம்பரசன் (வயது 25). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வேலை முடித்து பாலசமுத்திரம் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் மது குடித்துக் கொண்டு இருந்தார்.
அப்போது உடன் இருந்த சிலருக்கும் சிலம்பரசனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கத்தியால் சிலம்பரசனை குத்தினர். படுகாயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலையாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
இக்கொலையில் தொடர்புடைய நாகராஜ் மகன் சக்திவேல் (25), காளியப்பன் மகன் ரமேஷ் (25), சபரியார் மகன் ஆனந்த் (25) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரும் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனை யடுத்து அவர்கள் நீதி மன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டு சிறையில் அடைக் கப்பட உள்ளனர்.
பழனி அருகே உள்ள சிவகிரிப்பட்டியைச் சேர்ந்த முனியாண்டி மகன் சிலம்பரசன் (வயது 25). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வேலை முடித்து பாலசமுத்திரம் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் மது குடித்துக் கொண்டு இருந்தார்.
அப்போது உடன் இருந்த சிலருக்கும் சிலம்பரசனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கத்தியால் சிலம்பரசனை குத்தினர். படுகாயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலையாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
இக்கொலையில் தொடர்புடைய நாகராஜ் மகன் சக்திவேல் (25), காளியப்பன் மகன் ரமேஷ் (25), சபரியார் மகன் ஆனந்த் (25) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரும் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனை யடுத்து அவர்கள் நீதி மன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டு சிறையில் அடைக் கப்பட உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X