என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மனைவி புகார் எதிரொலி - டாக்டர் உள்ளிட்ட 3 பேர் மீது வரதட்சணை வழக்கு
Byமாலை மலர்17 July 2019 10:19 AM GMT (Updated: 17 July 2019 10:19 AM GMT)
புதுச்சேரியில் மனைவி கொடுத்த புகாரின் எதிரோலியாக டாக்டர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வரதட்சணை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி:
சென்னை அய்யப்பன் தாங்கலை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் பாபு (வயது 40) டாக்டர்.
இவருக்கும், புதுவை அரியாங்குப்பம் பாரதி வீதியை சேர்ந்த அரசு டாக்டர் சீதாலட்சுமி (36) என்பவருக்கும் 5 ஆண்டு களுக்கு முன்னர் பெற்றோர் நிச்சயித்தபடி திருமணம் நடந்தது.
அப்போது பாபுவிற்கு சீதாலட்சுமியின் வீட்டினர் வரதட்சணை கொடுத்துள்ளனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே 3 ஆண்டுகளுக்கு முன்னர் பாபு புதியதாக வீட்டு மனை வாங்க தனது மனைவி சீதாலட்சுமியிடம் அவரது வீட்டில் இருந்து ரூ.70 லட்சம் வரதட்சணையாக வாங்கி வர கூறினார்.
அப்போது அவர் அரியாங்குப்பத்திலேயே வீடு வாங்கி அதனை சீதா லட்சுமியின் பெயரில் எழுதலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பிய சீதாலட்சுமி தனது பெற்றோர்களிடம் கூறி ரூ.50 லட்சம் வாங்கி கொடுத்துள்ளார்.
ஆனால், அந்த பணத்தை கொண்டு பாபு தனது தாய் ஜோதி பெயரில் சென்னை அய்யப்பன்தாங்கலில் வீட்டு மனை வாங்கியுள்ளார். இதுகுறித்து சீதாலட்சுமி கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் பாபு, அவரது தந்தை ஏழுமலை, தாய் ஜோதி ஆகியோர் சீதாலட்சுமியை மிரட்டினார்கள்.
இதுகுறித்து சீதாலட்சுமி புதுவை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் டாக்டர் பாபு உள்ளிட்ட 3 பேர் மீதும் மோசடி செய்தல், வரதட்சணை கேட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அய்யப்பன் தாங்கலை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் பாபு (வயது 40) டாக்டர்.
இவருக்கும், புதுவை அரியாங்குப்பம் பாரதி வீதியை சேர்ந்த அரசு டாக்டர் சீதாலட்சுமி (36) என்பவருக்கும் 5 ஆண்டு களுக்கு முன்னர் பெற்றோர் நிச்சயித்தபடி திருமணம் நடந்தது.
அப்போது பாபுவிற்கு சீதாலட்சுமியின் வீட்டினர் வரதட்சணை கொடுத்துள்ளனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே 3 ஆண்டுகளுக்கு முன்னர் பாபு புதியதாக வீட்டு மனை வாங்க தனது மனைவி சீதாலட்சுமியிடம் அவரது வீட்டில் இருந்து ரூ.70 லட்சம் வரதட்சணையாக வாங்கி வர கூறினார்.
அப்போது அவர் அரியாங்குப்பத்திலேயே வீடு வாங்கி அதனை சீதா லட்சுமியின் பெயரில் எழுதலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பிய சீதாலட்சுமி தனது பெற்றோர்களிடம் கூறி ரூ.50 லட்சம் வாங்கி கொடுத்துள்ளார்.
ஆனால், அந்த பணத்தை கொண்டு பாபு தனது தாய் ஜோதி பெயரில் சென்னை அய்யப்பன்தாங்கலில் வீட்டு மனை வாங்கியுள்ளார். இதுகுறித்து சீதாலட்சுமி கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் பாபு, அவரது தந்தை ஏழுமலை, தாய் ஜோதி ஆகியோர் சீதாலட்சுமியை மிரட்டினார்கள்.
இதுகுறித்து சீதாலட்சுமி புதுவை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் டாக்டர் பாபு உள்ளிட்ட 3 பேர் மீதும் மோசடி செய்தல், வரதட்சணை கேட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X