search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    துத்திப்பட்டு வெடிகுண்டு வழக்கில் தேடப்பட்டவர் கைது

    துத்திப்பட்டு வெடிகுண்டு வழக்கில் தேடப்பட்டு வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
    சேதராப்பட்டு:

    சேதராப்பட்டை அடுத்த துத்திப்பட்டில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 8-ந்தேதி இரவு 20-க்கும் மேற்பட்டவர்கள் நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது குண்டு வெடித்து பாம் ரவி படுகாயம் அடைந்தார்.

    அவர், ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் துத்திப்பட்டு விடுதலை சிறுத்தை பிரமுகரை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டு தயார் செய்தது தெரிய வந்தது.

    அவர் கொடுத்த வாக்குமூலத்தில் துத்திப்பட்டை சேர்ந்த பிரதாப் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தில் துத்திப்பட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த குறளரசன் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை சேதராப்பட்டு போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் துத்திப்பட்டு விடுதலை சிறுத்தை பிரமுகர் பாக்யராஜை குறளரசன் போன் மூலம் தொடர்பு கொண்டு உன்னை 2 மாதத்தில் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.

    இதுகுறித்து பாக்யராஜ் சேதராப்பட்டு போலீசில் புகார் அளித்தார். இதில் குறளரசன் வில்லியனூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் அங்கு பதுங்கி இருந்த குறளரசனை கைது செய்தனர்.

    Next Story
    ×