என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிலத்தகராறில் ராணுவவீரர் வெட்டிக்கொலை - கைதான தம்பி சேலம் சிறையில் அடைப்பு
Byமாலை மலர்16 July 2019 11:00 AM GMT (Updated: 16 July 2019 11:00 AM GMT)
நிலத்தகராறில் ராணுவவீரர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கைதான அவரது தம்பி சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் தர்கா பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 45) முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு சரண்யா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
ஈஸ்வரனின் தம்பி பழனி(40). லாரி டிரைவர். இவர்களுக்கு நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இதுதொடர்பாக அண்ணன், தம்பிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று அவர்களுக்கு இடையே நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பழனி அரிவாளால் அண்ணன் ஈஸ்வரன் தலையை வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். கணவரை வெட்டுவதை தடுக்க வந்த சரண்யாவுக்கு கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து தொப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார், ஈஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பி பழனியை கைது செய்தனர். கைதான பழனியை தர்மபுரி கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். நிலத்தகராறு காரணமாக சொந்த அண்ணனையே தம்பி தலையை துண்டித்து கொன்ற சம்பவம் ஈஸ்வரனின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் தர்கா பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 45) முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு சரண்யா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
ஈஸ்வரனின் தம்பி பழனி(40). லாரி டிரைவர். இவர்களுக்கு நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இதுதொடர்பாக அண்ணன், தம்பிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று அவர்களுக்கு இடையே நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பழனி அரிவாளால் அண்ணன் ஈஸ்வரன் தலையை வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். கணவரை வெட்டுவதை தடுக்க வந்த சரண்யாவுக்கு கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து தொப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார், ஈஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பி பழனியை கைது செய்தனர். கைதான பழனியை தர்மபுரி கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். நிலத்தகராறு காரணமாக சொந்த அண்ணனையே தம்பி தலையை துண்டித்து கொன்ற சம்பவம் ஈஸ்வரனின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X