என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமணமான 15 நாளில் பரிதாபம்- லாரியில் இருந்து தவறி விழுந்து புதுமாப்பிள்ளை பலி
Byமாலை மலர்16 July 2019 10:20 AM GMT (Updated: 16 July 2019 10:20 AM GMT)
நெகமம் அருகே லாரியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் திருமணமான 15 நாட்களில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெகமம்:
திருப்பூர் போஸ்ட்டல் வீதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் மாயவன் (வயது 26). இவர் கியாஸ் லாரி டிரைவர். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன் நந்தினி(வயது 19) என்பவருடன் திருமணம் நடந்தது.
இவர் சம்பவத்தன்று திருப்பூரில் இருந்து காலி சிலிண்டர்களை ஏற்றி கொண்டு நெகமம் அருகே உள்ள பெரியகளந்தையில் செயல்பட்டு வரும் கியாஸ் நிரப்பும் நிறுவனத்துக்கு வந்தார். அப்போது வரும் வழியில் அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் லாரியை நிறுத்தினார். அப்போது எதிர்பாராத விதமாக மாயவன் லாரியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் லாரியின் மரக்கட்டையில் மோதியதில் அவரது மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 15 நாட்களில் மாயவன் இறந்தது அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத் தியுள்ளது.
திருப்பூர் போஸ்ட்டல் வீதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் மாயவன் (வயது 26). இவர் கியாஸ் லாரி டிரைவர். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன் நந்தினி(வயது 19) என்பவருடன் திருமணம் நடந்தது.
இவர் சம்பவத்தன்று திருப்பூரில் இருந்து காலி சிலிண்டர்களை ஏற்றி கொண்டு நெகமம் அருகே உள்ள பெரியகளந்தையில் செயல்பட்டு வரும் கியாஸ் நிரப்பும் நிறுவனத்துக்கு வந்தார். அப்போது வரும் வழியில் அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் லாரியை நிறுத்தினார். அப்போது எதிர்பாராத விதமாக மாயவன் லாரியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் லாரியின் மரக்கட்டையில் மோதியதில் அவரது மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 15 நாட்களில் மாயவன் இறந்தது அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத் தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X