search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் நிறுத்தம்
    X
    மின்சாரம் நிறுத்தம்

    கே.கே.நகர்-ராம்ஜிநகர்-சிறுகாம்பூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

    கே.கே.நகர்-ராம்ஜிநகர்-சிறுகாம்பூர் பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    திருச்சி:

    திருச்சி கே.சாத்தனூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை காலை 9.45 மணி முதல் மதியம் 2 மணி வரை திருச்சி கே.கே.நகர், இந்தியன் வங்கி காலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ.காலனி, கிருஷ்ணமூர்த்திநகர், சுந்தர்நகர், அய்யப்பநகர், எல்.ஐ.சி. காலனி, பழனிநகர், முல்லைநகர், ஆர்.வி.எஸ். நகர், வயர்லஸ் சாலை, செம்பட்டின் ஒரு பகுதி, குடித்தெரு, பாரதிநகர்,

    காமராஜர் நகர், ஜே.கே.நகர், சந்தோஷ்நகர், ஆனந்த் நகர், கே.சாத்தனூர், ஓலையூர், வடுகப்பட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, காஜாநகர், சிம்கோ காலனி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது, என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் கழகத்தின் திருச்சி கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

    திருச்சி அருகே அம்மாபேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி ராம்ஜிநகர், கள்ளிக்குடி, புங்கனூர், அரியாவூர், நவலூர்குட்டப்பட்டு, சத்திரப்பட்டி, புதுக்குளம், பூலாங்குளத்துப்பட்டி, அம்மாபேட்டை, இனாம்குளத்தூர், வெள்ளிவாடி, ஆலம்பட்டிபுதூர், சித்தாநத்தம், வடசேரி, கரையான்பட்டி, சமுத்திரம், இடையாப்பட்டி, மரவனூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் பகல் 2 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

    இதேபோல வேங்கை மண்டலம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி மூவானூர், வேங்கை மண்டலம், தண்ணீர்பந்தல், மேலக் கண்ணுக்குளம், கீழக்கண்ணுக்குளம், பார்வதிபுரம், குருவம்பட்டி, கல்லூர், வேப்பந்தரை, சோழங்கநல்லூர், செந்தாமரைக்கண், சிறுகாம்பூர், நெ.2 கரியமாணிக்கம், சென்னகரை, ராமகிரிப்பட்டி, செங்குடி, வாழ்மால்பாளையம், செட்டிமங்கலம்,

    நெய்வேலி, கிளியநல்லூர், வாத்தலை, வி.மணியம்பட்டி, சிலையாத்தி, துடையூர், பாண்டியபுரம், சுனைப்புகநல்லூர், ஈச்சம்பட்டி, மூவராயம்பாளையம், கவுண்டம்பட்டி, குருவிக்காரன்குளம், காட்டுகுளம், தீராம்பாளையம், தில்லாம்பட்டி, பழையூர், செங்குழிப்பட்டி, உடையாம்பட்டி, திருவரங்கப்பட்டி, பெரமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. இத்தகவலை ஸ்ரீரங்கம் மின்சார வாரிய செயற்பொறியாளர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×