என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி-இஞ்சி விலை உயர்வு
போரூர்:
கோயம்பேடு காய்கறி மார்கெட்டிற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது.
பருவ மழை பெய்யாததால் கடும் வறட்சி ஏற்பட்டு விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளதால் விளைச்சல் குறைந்து காய்கறிகள் வரத்து பாதியாக குறைந்து உள்ளது.
இதன் காரணமாக காய்கறிகள் விலை உயர்ந்து உள்ளது. குறிப்பாக தக்காளி, இஞ்சி, கோஸ் ஆகியவை மூன்றில் ஒரு பங்கு மட்டுமே தற்போது கோயம்பேடு சந்தைக்கு வருவதால் அதன் விலை அதிகரித்துவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ 25க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பெங்களூர் தக்காளி தற்போது 35 ரூபாய்க்கும் ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த இஞ்சி 200 ரூபாய்க்கும் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டை கோஸ் தற்போது 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்