search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செயின் பறிப்பு
    X
    செயின் பறிப்பு

    தூத்துக்குடியில் பெண்ணிடம் செயின் பறிப்பு

    தூத்துக்குடியில் கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த கொண்டிருந்த பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் 3 பவுன் செயினை பறித்து சென்று தப்பி ஓடி விட்டார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பிரையண்ட் நகர், 5-வது தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி கவிதா(வயது 40). இந்நிலையில் நேற்று இரவு கடைக்கு சென்றுவிட்டு கவிதா வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் கவிதா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் எடையுள்ள செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றார்.

    இது குறித்து தென்பாகம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×