search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மனைவியிடம் வரதட்சணை கேட்ட கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு-மாமியார் கைது

    குடும்பம் நடத்த அழைக்க மறுத்து மனைவியிடம் வரதட்சணை கேட்ட கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து மாமியாரை கைது செய்தனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியைச் சேர்ந்தவர் தங்க பிரகாஷ் (வயது28). இவருக்கும் அதே பகுதியில் உள்ள டாடா நகரைச் சேர்ந்த தமிழ்ஜோதி என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் தமிழ்ஜோதி கர்ப்பமாகி குழந்தை பெற்று கொள்வதற்காக கடந்த 7 மாதத்திற்கு முன்பு அவரது தாய் வீட்டிற்கு வந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு குழந்தை பிறந்தது.

    தமிழ்ஜோதிக்கு குழந்தை பிறந்தும் இதுவரை அவரது கணவர் வீட்டிற்கு அழைத்து செல்லவில்லை. இதுகுறித்து அவர் தனது கணவரிடமும், மாமியார் சகுந்தலாவிடமும் கேட்டார். அதற்கு அவர்கள், தமிழ்ஜோதியின் தாய் வீட்டில் இருந்து பணமும், நகைகளையும் வாங்கி கொண்டுவரவேண்டும் என்றும், அதன்பிறகு அவரை அழைத்து செல்வதாகவும் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தமிழ்ஜோதி தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வரதட்சணை கொடுத்தால் தான் குடும்பம் நடத்த அழைத்து செல்வதாகவும் எனது கணவர் தெரிவித்ததாகவும், இதற்கு உடந்தையாக மாமியார் சகுந்தலா, அனுஜா, அனிதா ஆகியோர் இருப்பதாகவும், எனவே, கணவர் உள்பட 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் தெரிவித்தார். 

    புகாரின் பேரில் போலீசார் 4 பேர் மீதும் வழக்குபதிவு செய்து  தமிழ்ஜோதியின் மாமியார் சகுந்தலாவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×