search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாதிரி படம்
    X
    மாதிரி படம்

    சென்னையில் என்ஐஏ சோதனை - இருவருக்கு சம்மன்

    சென்னையில் உள்ள மண்னடியில் சோதனை நடத்திய என்ஐஏ அதிகாரிகள், இன்று மாலை ஆஜராகும்படி இருவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
    சென்னை:

    இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ந்தேதி ஈஸ்டர் தினத்தன்று ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் 9 இடங்களில் தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள்.

    இந்த கொடூர நாச வேலையால் 259 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் முதலில் தமிழ்நாட்டில்தான் இந்த குண்டு வெடிப்பை நடத்த திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது.

    தமிழ்நாட்டில் அவர்களுக்கு ஆதரவான சூழ்நிலை கிடைக்காததால் இலங்கை சென்று கொழும்பில் கை வரிசை காட்டி உள்ளனர். என்றாலும் இலங்கையில் உள்ள ஐ.எஸ். ஆதரவு நிர்வாகிகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள ஐ.எஸ். ஆதரவாளர்கள் உதவிகள் செய்து இருப்பது தெரிய வந்தது.

    கடந்த 2 மாதங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சேகரித்த தகவல்களில் சென்னையில் உள்ள சிலர் மீதும் சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இதற்கிடையே, சென்னையில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்ட னர். மண்ணடியில் உள்ள வஹாதத்தே இஸ்லாமி ஹிந்த் என்ற அமைப்பின் அலுவலகத்துக்கு சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    இந்த சோதனையில், ஹார்ட் டிஸ்க் மற்றும் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  இதையடுத்து, தாஜூதீன் மற்றும் இஸ்மாயில் ஆகியோருக்கு என்ஐஏ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். கிண்டியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் இன்று மாலை ஆஜராகும்படி இருவருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×