search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
    X
    திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

    தபால் துறை தேர்வில் தமிழ் புறக்கணிப்பு -மு.க.ஸ்டாலின் கண்டனம்

    தபால் துறை தேர்வு வினாத்தாள்கள் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே என தபால்துறை அனுப்பிய சுற்றறிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    இந்தியா முழுவதும் தபால் துறை நடத்தும் பல்திறன் பணியாளர்கள், மெயில் கார்டு, தபால்காரர், அஞ்சலக உதவியாளர், சார்டிங் அசிஸ்டெண்ட் போன்ற தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அந்தந்த மாநில மொழிகளில் வந்துக் கொண்டிருந்தன.

    இந்நிலையில் தபால் துறை நடத்தும் பல்வேறு தேர்வுகளில் முதல்தாளுக்கான தேர்வுகள் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே எனவும், இரண்டாம் தாள் அந்தந்த மாநிலங்களுக்கு ஆங்கிலத்தில் இருந்து அந்தந்த மாநில மொழிகளில் வழங்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்தது.

    இதற்கு முன்னதாக இரண்டு வினாத்தாள்களுமே அந்தந்த மாநில மொழிகளில் வழங்கப்பட்டன. இப்போது முதல் தாள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கான சுற்றறிக்கை கடந்த 11ம்தேதி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது. இந்த சுற்றறிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.



    Next Story
    ×