என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செங்குன்றம் அருகே வாலிபரை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது
Byமாலை மலர்13 July 2019 6:56 AM GMT (Updated: 13 July 2019 6:56 AM GMT)
செங்குன்றம் அருகே வாலிபரை அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்குன்றம்:
செங்குன்றத்தை அடுத்த பழைய நல்லூர் சத்யவாணி முத்து தெருவை சேர்ந்தவர் கவுதம்ராஜ் (25) பெயிண்டர். அதே பகுதியை சேர்ந்த லோகேஸ்வரனுக்கும் இவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
நேற்று கவுதம்ராஜ் நடந்து சென்ற போது நண்பர்களுடன் சேர்ந்து லோகேஸ்வரன் அவரை தாக்கினார்.
4 பேரும் சேர்ந்து அடித்து உதைத்ததோடு, அரிவாளாலும் வெட்டினர். இதனால் ரத்த வெள்ளத்தில் கவுதம்ராஜ் மயங்கி விழுந்தார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
உயிருக்கு போராடிய அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி கவுதம்ராஜ் மீது தாக்குதல் நடத்திய 4 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட லோகேஸ்வரன் சந்திப்குமார் (22), டேவிட் (24), செந்தில் (30) ஆகியோர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X