search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    ஊத்துக்கோட்டையில் மோட்டார் சைக்கிள் பூட்டை உடைத்து 60 பவுன் நகை கொள்ளை

    ஊத்துக்கோட்டையில் மோட்டார் சைக்கிளின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை கொள்ளையடிக்கப் பட்டது. சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அடுத்து உள்ள தாராட்சி கிராமத்தை சேர்ந்தவர் அஜீம்பாய் (55). விவசாயி. இவர் நேற்று ஊத்துக்கோட்டையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள லாக்கரிலிருந்து 60 பவுன் தங்க நகைகளை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார்.

    வங்கியின் எதிரே உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் எலக்ட்ரிக்கல் பொருட்கள் வாங்கி கொண்டு வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளின் இருக்கையின் கீழ் உள்ள பெட்டி உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் வைத்த கம்மல், ஜிமிக்கி, நெக்லஸ், வளையல்கள், செயின் உள்பட 13 வகையான 60 பவுன் தங்க நகை பை காணவில்லை.

    இது குறித்து அஜீம்பாய் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    எலக்ட்ரிக்கல் கடையில் வைத்திருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆராய்ந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்களின் ஒருவன் அஜீம்பாயின் மோட்டார் சைக்கிளின் பூட்டை உடைத்து நகை பை எடுத்து கொண்டு தயாராக நின்றிருந்த மோட்டார் சைக்கிளில் தப்பி செல்லும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதை வைத்து 60 பவுன் தங்க நகைகளை கொள்யையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

    Next Story
    ×