search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    சுசீந்திரம் அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து கொள்ளை

    சுசீந்திரம் அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    சுசீந்திரத்தை அடுத்த மேல கிருஷ்ணன்புதூர் பகுதியில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று கோவிலில் பூஜைகள் முடிந்தபின்னர் கோவில் நடையை பூசாரி பூட்டிவிட்டு சென்றார். பின்னர் மறுநாள் வழக்கமான பூஜைகள் மேற்கொள்வதற்காக பூசாரி கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதுகுறித்து கோவில் நிர்வாகிக்கு பூசாரி தகவல் தெரிவித்தார். மேலும் சுசீந் திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ் பெக்டர் ஜெகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற் கொண்டனர்.

    விசாரணையில் கொள்ளையர்கள் கோவிலின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கு இருந்த 3 கண் காணிப்பு கேமிரா மற்றும் காட்சிகள் பதிவாகும் ஒளிப்பதிவு பெட்டி மற்றும் பூஜை பொருட்களை கொள்ளையடித்துச் சென்று இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனையிலும் ஈடுபட்டனர். சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த நபர்களை பிடித்து விசாரணை மேற் கொண்டனர். மேலும் கை ரேகை நிபுணர்களும் வர வழைக்கப்பட்டனர். அவர்கள் கோவில் பூட்டு உடைக்கப்பட்ட இடம் மற்றும் பூஜை பொருட்கள் இருந்த இடங்களில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×