என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சரியான நேரத்தில் வெளிவந்துள்ள நூல் தமிழாற்றுப்படை - ஸ்டாலின் புகழாரம்
Byமாலை மலர்12 July 2019 4:09 PM GMT (Updated: 12 July 2019 4:09 PM GMT)
சென்னையில் நடந்த வைரமுத்துவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மிகவும் சரியான நேரத்தில் தமிழாற்றுப்படை நூல் வெளிவந்துள்ளது என்றார்.
சென்னை:
சென்னை தேனாம்பேட்டையில் கவிஞர் வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை நூலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட ப.சிதம்பரம் பெற்றுக்கொண்டார். அப்போது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழின் தொன்மையை சிதைக்கும் முயற்சி நடக்கிறது. நாம் போராட வேண்டிய நிலைக்கு வந்துள்ளோம். மிகச்சரியான நேரத்தில் தமிழாற்றுப்படை நூல் வெளிவந்துள்ளது.
தொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி கண்டவர் வைரமுத்து, திரைத்துறையில் அவரை விட அதிக விருது பெற்றவர் யாரும் இல்லை -
வடமொழி ஆதிக்கத்தை புகுத்த நினைக்கும் இந்த நிலையில், வைரமுத்து தமிழாற்றுப்படை நூலை தந்துள்ளார் என புகழாரம் சூட்டினார்.
இதேபோல் விழாவில் பங்கேற்ற ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ பேசுகையில், வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சி காவியமும் 21-ம் நூற்றாண்டின் இரட்டை காப்பியங்கள். நோபல் பரிசு கவிஞர் வைரமுத்துவின் வீட்டுக் கதவை தட்டும். வைரமுத்து எழுதிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்றார்.
புத்தகத்தை பெற்றுக் கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேசுகையில், வைரமுத்துவின் தமிழாற்றுப்படை நூல் வரலாற்றில் நாகரிகத்தின் அடையாளம். சிலர் தமிழ் தமிழ் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள், ஆனால் தமிழில் பேசுவதும், எழுதுவதும் இல்லை, இது தமிழ் மொழிக்கு அழிவை தரும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X