search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருமண ஆசை காட்டி மைனர்பெண் பலாத்காரம் போக்சோவில் ஆட்டோ டிரைவர் கைது

    நத்தம் அருகே திருமண ஆசை காட்டி மைனர் பெண்ணை பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகில் உள்ள செல்லப்பநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் தவச்செல்வன் (வயது27). ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு திருணம் ஆகி ஒரு வயதில் கைக்குழந்தை உள்ளது.

    புதுக்கோட்டையை சேர்ந்த 16 வயது சிறுமி நத்ததில் உள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது தவச்செல்வனுக்கும், சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. தான் திருணம் செய்து கொள்வதாக அவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த மே மாதம் சிறுமி மாயமானார். இது குறித்து அவரது பெற்றோர் நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    கடந்த 2 மாதமாக சிறுமியை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. டி.எஸ்.பி. வினோத் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்லா தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடினர். இதில் அந்த சிறுமி கடலூர் பகுதியில் இருந்தது தெரிய வந்தது. அங்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டு வந்தனர்.

    தவச்செல்வன் திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரை பல முறை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து தவச்செல்வன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    Next Story
    ×