என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற மில் தொழிலாளி வீட்டில் கொள்ளை
Byமாலை மலர்12 July 2019 11:46 AM GMT (Updated: 12 July 2019 11:46 AM GMT)
தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற மில் தொழிலாளி வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி டோல்பேட்டையை சேர்ந்தவர் ஆதிநாராயணன் (வயது 67). தனியார் மில்லில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நேற்று குடும்பத்துடன் உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சாயர்புரத்திற்கு சென்றுவிட்டார். பின்னர் இரவு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ திறக்கப்பட்டு 3 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருந்தது. இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் என கூறப்படுகிறது.
இது குறித்து வடபாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக அப்பகுதியினர் கூறும்போது சமீப காலமாக தூத்துக்குடியில் வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணாநகர், பாரதிநகர் பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் தற்போது இங்கு கொள்ளை நடந்துள்ளது. எனவே போலீசார் தீவிர விசாரணை நடத்தி உடனடியாக கொள்ளையர்களை பிடிக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்தனர்.
தூத்துக்குடி டோல்பேட்டையை சேர்ந்தவர் ஆதிநாராயணன் (வயது 67). தனியார் மில்லில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நேற்று குடும்பத்துடன் உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சாயர்புரத்திற்கு சென்றுவிட்டார். பின்னர் இரவு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ திறக்கப்பட்டு 3 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருந்தது. இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் என கூறப்படுகிறது.
இது குறித்து வடபாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக அப்பகுதியினர் கூறும்போது சமீப காலமாக தூத்துக்குடியில் வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணாநகர், பாரதிநகர் பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் தற்போது இங்கு கொள்ளை நடந்துள்ளது. எனவே போலீசார் தீவிர விசாரணை நடத்தி உடனடியாக கொள்ளையர்களை பிடிக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X