என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காதல் மனைவியை மீட்டு தரக்கோரி கணவர் போலீசில் புகார்
Byமாலை மலர்11 July 2019 2:47 PM GMT (Updated: 11 July 2019 2:47 PM GMT)
போச்சம்பள்ளி அருகே வேலைக்கு செல்லும் தகராறில் பெற்றோர் வீட்டுக்கு சென்ற காதல் மனைவியை மீட்டு தரக்கோரி கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்துள்ள அரசம்பட்டியை சேர்ந்தவர்முருகன். இவரது மகன் உமாபதி (வயது23). பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ரத்தினவேல் மகள் கவுசல்யா (23). பயோ மெடிக்கல் படித்து முடித்த இவரும், உமாபதியும் காதலித்து வந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு போச்சம்பள்ளி கருநெடுபழனி ஆண்டவர் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினர் இருவரும் தற்போது அரசம்பட்டியில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் உமாபதி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வீட்டில் தனியாக இருந்த கவுசல்யா நானும் வேலைக்கு செல்கிறேன் என்று கணவரிடம் கூறினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த காணப்பட்ட கவுசல்யா கோபித்து கொண்டு பெரம்பலூரில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றார். அங்கு உமாபதி சென்று நாம் ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடத்தலாம் என்று மனைவியை அழைத்தார். ஆனால் அதற்கு கவுசல்யா வர மறுத்ததாக தெரிகிறது.
இது குறித்து பாரூர் போலீசில் உமாபதி புகார் கொடுத்தார். அந்த புகாரில் எனது மனைவி கவுசல்யாவை பெற்றோரிடம் இருந்து மீட்டு தரக்கோரி கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X