என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
Byமாலை மலர்11 July 2019 11:14 AM GMT (Updated: 11 July 2019 11:14 AM GMT)
தமிழகத்தில் அ.தி.மு.க. சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களான முகமது ஜான், சந்திரசேகர் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முதல்வர் பழனிசாமியை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சென்னை:
அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட முகமது ஜான், சந்திரசேகர் மற்றும் கூட்டணி கட்சியான பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
இதற்கிடையே, வேட்புமனு தாக்கல் செய்த 3 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என சட்டப் பேரவை செயலர் சீனிவாசன் தெரிவித்தார். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு சான்றிதழை வழங்கினார்.
இந்நிலையில், அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை தேர்தலில் எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்ட முகமது ஜான், சந்திரசேகர் மற்றும் கூட்டணி கட்சியான பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்தனர். அப்பொழுது தங்களுக்கு அளிக்கப்பட்ட சான்றிதழை காட்டி அவரிடம் வாழ்த்து பெற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X