என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வடமதுரை போலீசில் காதலனுடன் தஞ்சமடைந்த நர்சிங் மாணவி
வடமதுரை:
வடமதுரை அருகே தீத்தா கிழவனூரைச் சேர்ந்தவர் சங்கீதா (வயது 19). நர்சிங் கல்லூரி மாணவி. கல்பட்டிசத்திரம் சீத்தப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 20) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறி பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்துள்ளனர்.
இவர்கள் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவரவே எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அச்சமடைந்த காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி வடமதுரை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். போலீசார் காதல் ஜோடியின் பெற்றோர்களை அழைத்து சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்.
அய்யலூர் அருகே குரும்பபட்டியைச் சேர்ந்த சரவணன் (25) பைனான்சியர். இவருக்கும் கருவார் பட்டியைச் சேர்ந்த பிரியா (22) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. வீட்டில் எதிர்ப்பு கிளம்பவே காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பு கேட்டு திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் தஞ்சமடைந்தனர்.
அவரது உத்தரவுபடி வடமதுரை போலீசார் காதல் ஜோடியின் பெற்றோர்களை அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்