search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சான்றிதழ் பெறும் அன்புமணி ராமதாஸ்
    X
    சான்றிதழ் பெறும் அன்புமணி ராமதாஸ்

    மாநிலங்களவை தேர்தல் - வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு

    டெல்லி மேல்சபை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்பட அதிமுக மற்றும் திமுக வேட்பாளர் 6 பேரும் போட்டியின்றி எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
    சென்னை: 

    பாராளுமன்ற மேல் சபையில் தமிழக எம்.பி.க் கள் 6 பேர் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிதாக 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வரும் 18-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. 

    6 பாராளுமன்ற மேல் சபை எம்.பி.க்களை தமிழக சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்ய வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிட்டால் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் 3 எம்.பி.க்களையும் தி.மு.க. கூட்டணி சார்பில் 3 எம்.பி.க்களையும் தேர்வு செய்ய முடியும். 

    அ.தி.மு.க. வேட்பாளராக சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளரான வேலூரை சேர்ந்த முகமது ஜான், மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரன் ஆகியோரும், அ.தி.மு.க. தோழமை கட்சியான பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாசும் மனுத்தாக்கல் செய்தனர். 

    தி.மு.க. வேட்பாளர்களாக தொ.மு.ச. பொதுச் செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோரும், கூட்டணி கட்சியான ம.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் வைகோவும் மனு தாக்கல் செய்தனர். 

    தேர்வானவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் சட்டசபை செயலாளர்

    இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    அதன்படி, அதிமுகவின் முகமது ஜான், சந்திரசேகர், பாமகவின் அன்புமணி, திமுகவின் வில்சன், சண்முகம், மதிமுகவின் வைகோ ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என சட்டப் பேரவை செயலர் சீனிவாசன் தெரிவித்தார். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களுக்கு  சான்றிதழை வழங்கினார்.
    Next Story
    ×