என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
Byமாலை மலர்11 July 2019 3:03 AM GMT (Updated: 11 July 2019 3:03 AM GMT)
குடும்ப பிரச்சினை காரணமாக பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள தாமரைப்பாடி கல்லாத்துப்பட்டியை சேர்ந்தவர் டேனியல். இவருடைய மனைவி கங்காதேவி (வயது 33). இவர், திண்டுக்கல் ஆயுதப்படையில் போலீசாக உள்ளார். தம்பதியினருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். டேனியல் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்றும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது வேலைக்கு செல்லாமல் இருப்பது குறித்து கங்காதேவி கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டேனியல் மனைவியை திட்டியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த கங்காதேவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்றது குறித்த புகாரின் பேரில் வடமதுரை போலீசார் விசாரணை நடத்தினர்.
குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இருந்த போதிலும் தற்கொலை முயற்சிக்கு பணிச்சுமை போன்ற வேறு காரணங்கள் ஏதும் உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே உள்ள தாமரைப்பாடி கல்லாத்துப்பட்டியை சேர்ந்தவர் டேனியல். இவருடைய மனைவி கங்காதேவி (வயது 33). இவர், திண்டுக்கல் ஆயுதப்படையில் போலீசாக உள்ளார். தம்பதியினருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். டேனியல் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்றும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது வேலைக்கு செல்லாமல் இருப்பது குறித்து கங்காதேவி கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டேனியல் மனைவியை திட்டியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த கங்காதேவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்றது குறித்த புகாரின் பேரில் வடமதுரை போலீசார் விசாரணை நடத்தினர்.
குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இருந்த போதிலும் தற்கொலை முயற்சிக்கு பணிச்சுமை போன்ற வேறு காரணங்கள் ஏதும் உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X