என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கன்னியாகுமரி அருகே கோவில் பூட்டை உடைத்து பணம்-பொருட்கள் கொள்ளை
Byமாலை மலர்10 July 2019 3:12 PM GMT (Updated: 10 July 2019 3:12 PM GMT)
கன்னியாகுமரி அருகே கோவில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே ஒற்றையால்விளை பகுதியில் கொல்லத்து மூர்த்தி கோவில் உள்ளது. இங்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இது தவிர மற்ற நாட்களில் கோவிலில் விளக்கு ஏற்றி வைக்கப்படும். கோவில் நிர்வாகி ஸ்ரீராமச்சந்திரன் தினமும் மாலையில் சென்று கோவிலை சுத்தம் செய்து அன்றாட பணிகளை கவனித்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் கோவிலுக்கு சென்றபோது கோவிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கோவில் திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கோவில் கதவில் உள்ள பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை அள்ளிச் சென்று உள்ளனர். மேலும் கோவிலில் இருந்த 4 குத்துவிளக்குகள், 3 வெங்கலத் தட்டுகள், கோவில் மணி, பூஜை பொருட்கள் மற்றும் கோவிலின் முன் பக்க கதவையும் கழற்றி சென்று உள்ளனர்.
இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிரா எதுவும் உள்ளதா? எனவும் அதில் கொள்ளையர்களின் உருவம் பதிந்து உள்ளதா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கோவில் பூட்டு உடைக்கப்பட்ட இடம், உண்டியல் வைக்கப்பட்டிருந்த இடங்களில் கொள்ளையர்களின் கை ரேகைகளை பதிவு செய்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X