search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்ணிடம் ஆபாச பேச்சு
    X
    பெண்ணிடம் ஆபாச பேச்சு

    பெண்ணிடம் செல்போனில் ஆபாசமாக பேசி தொல்லை: வியாபாரிக்கு அடி-உதை

    வில்லியனூரில் பெண்ணிடம் செல்போனில் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்த வியாபாரியை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    வில்லியனூர்:

    வில்லியனூர் போலீஸ் சரகத்துக்குட்பட்ட பகுதியை சேர்ந்த ஒரு வியாபாரி அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் செல்போன் எண்ணை தெரிந்து கொண்டு தொடர்ந்து அந்த பெண்ணிடம் செல்போனில் ஆபாசமாக பேசி வந்துள்ளார். அவமானம் கருதி இதனை அந்த பெண் போலீசில் புகார் தெரிவிக்க வில்லை.

    ஆனாலும், தொடர்ந்து வியாபாரி போனில் ஆபாசமாக பேசி வந்ததால் பொறுமை இழந்த அந்த பெண் தனது கணவரிடம் முறையிட்டார். இதில் ஆத்திரம் அடைந்த பெண்ணின் கணவர் மற்றும் 2 பேர் சேர்ந்து வியாபாரியை அடித்து உதைத்து உள்ளனர்.

    இதில், காயம் அடைந்த வியாபாரி புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரில் 3 பேர் தன்னை போனில் பேசி தனி இடத்துக்கு வரவழைத்து தாக்கியதாக தெரிவித்தார். ஆனால், அதற்கான காரணத்தை வியாபாரி தெரிவிக்கவில்லை.

    இதையடுத்து வியாபாரியை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×