search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ஒட்டன்சத்திரத்தில் கொலை வழக்கு தண்டனைக்கு பயந்து டிரைவர் தற்கொலை

    ஒட்டன்சத்திரம் அருகே கொலை வழக்கில் தண்டனைக்கு பயந்து கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வெள்ளியன் வலசு கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் தர்மராஜ் என்ற பரமசிவம் (வயது 34). இவர் சென்னையில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2009-ம் ஆண்டு வெள்ளியன்வலசு கிராமத்தைச் சேர்ந்த உஷாராணி என்பவரை கொலை செய்ததாக பரமசிவம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    தற்போது அந்த வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தனக்கு தண்டனை கிடைத்து விடும் என்று 3 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    இந்நிலையில் கடந்த 6-ந் தேதி திண்டுக்கல்லில் வழக்கு விசாரணைக்காக வந்த பரமசிவம் தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். பின்னர் அங்கேயே பூச்சி மருந்தை குடித்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஒட்டன்சத்திரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அம்பிளிக்கை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×