என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வத்தலக்குண்டு அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி
Byமாலை மலர்10 July 2019 8:04 AM GMT (Updated: 10 July 2019 8:04 AM GMT)
வத்தலக்குண்டு அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. வெங்கிடாஸ்திரி கோட்டை தெற்குத் தெரு காலனியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா மனைவி கார்த்திகா (வயது 28) என்பவர் தனது வீட்டில் ஸ்விட்சை போட முயன்றார். அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரது சத்தம் கேட்டு அருகில் உள்ள பிச்சை மனைவி பாண்டியம்மாள் (வயது 40) அவரை காப்பாற்ற முயன்றார்.
இதில் அவரது உடல் மீதும் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார். படுகாயமடைந்த 2 பேரையும் ஆட்டோவில் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டியம்மாள் உயிரிழந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் கார்த்திகா தேனி க.விலக்கு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்தலக்குண்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. வெங்கிடாஸ்திரி கோட்டை தெற்குத் தெரு காலனியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா மனைவி கார்த்திகா (வயது 28) என்பவர் தனது வீட்டில் ஸ்விட்சை போட முயன்றார். அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரது சத்தம் கேட்டு அருகில் உள்ள பிச்சை மனைவி பாண்டியம்மாள் (வயது 40) அவரை காப்பாற்ற முயன்றார்.
இதில் அவரது உடல் மீதும் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார். படுகாயமடைந்த 2 பேரையும் ஆட்டோவில் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டியம்மாள் உயிரிழந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் கார்த்திகா தேனி க.விலக்கு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X