என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மணவாளக்குறிச்சி அருகே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது
Byமாலை மலர்8 July 2019 10:43 AM GMT (Updated: 8 July 2019 10:43 AM GMT)
மணவாளக்குறிச்சி அருகே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணவாளக்குறிச்சி:
மணவாளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டு மற்றும் செயின் பறிப்பு ஆகியவை தொடர்ந்து நடந்து வந்தது.
இதையடுத்து இந்த திருட்டுச் சம்பவத்தை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் திருட்டுச் சம்பவத்தை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினார்கள். இதனால் போலீசார் அவர்களை போலீஸ்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் வடக்கன் பாகம் பகுதியை சேர்ந்த முகமது அல்டாப் (21), அஜிமன்கான் (வயது 19), முகமதுரிஜாடவ்பிக் (19) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் திருநயினார் ஏலப்பகுதியில் நடந்த 3 பவுன் செயின் பறிப்பு மற்றும் மோட்டார் சைக்கிள்களை திருடிய சம்பவத்தில் தொடர்புடையது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணவாளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டு மற்றும் செயின் பறிப்பு ஆகியவை தொடர்ந்து நடந்து வந்தது.
இதையடுத்து இந்த திருட்டுச் சம்பவத்தை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் திருட்டுச் சம்பவத்தை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினார்கள். இதனால் போலீசார் அவர்களை போலீஸ்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் வடக்கன் பாகம் பகுதியை சேர்ந்த முகமது அல்டாப் (21), அஜிமன்கான் (வயது 19), முகமதுரிஜாடவ்பிக் (19) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் திருநயினார் ஏலப்பகுதியில் நடந்த 3 பவுன் செயின் பறிப்பு மற்றும் மோட்டார் சைக்கிள்களை திருடிய சம்பவத்தில் தொடர்புடையது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X