என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பாகூரில் கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
பாகூர்:
பாகூர் தாமரைகுளம் நத்தம் பகுதியை சேர்ந்தவர் பரசுராமன் (வயது55), விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு வள்ளி என்ற மனைவியும், விஷ்ணு என்ற மகனும் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
விஷ்ணு ஐ.டி.ஐ. படித்து முடித்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பரசுராமன் தினமும் சம்பாதிக்கும் பணத்தை வீட்டு செலவுக்கு கொடுக்காமல் மதுகுடித்து வந்தார். இதனை அவரது மனைவி மற்றும் மகன் கண்டிக்கும் போது தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டி வந்தார்.
அதுபோல நேற்று முன்தினம் பரசுராமன் வேலை செய்த பணத்தை முழுவதும் மதுகுடித்து செலவழித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி வள்ளி மற்றும் மகன் விஷ்ணு கண்டித்தனர். அப்போது பரசுராமன் தற்கொலை செய்து கொள்ள போவதாக மனைவி-மகனிடம் கூறினார்.
வழக்கம்போல் பரசுராமன் மிரட்டுவதாக அவர்கள் இதனை கண்டு கொள்ளவில்லை. சிறிது நேரம் கழித்து வீட்டின் தோட்டத்தில் மாட்டு தொழுவம் அருகே சென்று பார்த்த போது அங்கு பரசுராமன் மரத்தில் சேலையால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு திடுக்கிட்டனர். உடனே அவரை தூக்கில் இருந்து மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பரசுராமன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்