என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எனக்கு பதில் இளங்கோ மாற்று வேட்பாளர்- வைகோ தகவல்
Byமாலை மலர்8 July 2019 7:25 AM GMT (Updated: 8 July 2019 7:25 AM GMT)
மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்துள்ள இளங்கோ, தனக்கு பதில் மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திண்டுக்கல்:
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது. சட்டமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் அடிப்படையில், திமுக 3 எம்பிக்களை தேர்வு செய்ய முடியும். அதன் அடிப்படையில் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. திமுக சார்பில் சண்முகம், வில்சன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஒரு இடம் வைகோவுக்கு ஒதுக்கப்பட்டு, அவரும் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், திமுக சார்பில் மற்றொரு வேட்பாளரான என்.ஆர்.இளங்கோ இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தேசத் துரோக வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் உள்ள வைகோவுக்கு, இந்த தேர்தலில் போட்டியிடுவதில் ஏதேனும் சிக்கல் ஏற்படும்பட்சத்தில் மாற்று வேட்பாளராக இளங்கோவை களமிறக்கியிருக்கலாம் என தகவல் வெளியானது. அதேசமயம், போட்டியை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
இதுபோன்ற தகவல் பரவிய நிலையில், இந்த விவகாரத்திற்கு வைகோ முற்றுப்புள்ளி வைத்தார். இது தொடர்பாக திண்டுக்கலில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது:-
ஆனால், தேசத் துரோக வழக்கில் எனக்கு தண்டனை கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. எனவே, மாற்று வேட்பாளரை நிறுத்தும்படி நான் தான் கூறினேன். அதன்படி, என்.ஆர்.இளங்கோ மாற்று வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். வழக்கு ஒன்றில் ஆஜராக செல்வதால் நாளை வேட்பு மனு பரிசீலனைக்கு நான் செல்ல மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது. சட்டமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் அடிப்படையில், திமுக 3 எம்பிக்களை தேர்வு செய்ய முடியும். அதன் அடிப்படையில் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. திமுக சார்பில் சண்முகம், வில்சன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஒரு இடம் வைகோவுக்கு ஒதுக்கப்பட்டு, அவரும் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், திமுக சார்பில் மற்றொரு வேட்பாளரான என்.ஆர்.இளங்கோ இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தேசத் துரோக வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் உள்ள வைகோவுக்கு, இந்த தேர்தலில் போட்டியிடுவதில் ஏதேனும் சிக்கல் ஏற்படும்பட்சத்தில் மாற்று வேட்பாளராக இளங்கோவை களமிறக்கியிருக்கலாம் என தகவல் வெளியானது. அதேசமயம், போட்டியை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
இதுபோன்ற தகவல் பரவிய நிலையில், இந்த விவகாரத்திற்கு வைகோ முற்றுப்புள்ளி வைத்தார். இது தொடர்பாக திண்டுக்கலில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது:-
பாராளுமன்றத் தேர்தலின்போது திமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் செய்துகொண்டோம். அப்போது நான் மாநிலங்களவை உறுப்பினர் அக வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் விரும்பினார். நான் போட்டியிடுவதாக இருந்தால் சீட் ஒதுக்கி தருவதாக கூறினார். அந்த அடிப்படையில், ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X