search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    மதுரவாயல் வாலிபர் கொலையில் 5 பேர் சிக்கினர்

    மதுரவாயல் வாலிபர் கொலையில் 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம், ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் நாயுடு வெங்கடேஷ் (வயது 27). ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர் நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த நண்பர் பாலசுந்தருடன் மதுரவாயல் ஏகம்பரம் இன்டஸ்டீரியல் எஸ்டேட் ரோட்டில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் 2 பேரையும் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    வயிறு, கையில் படுகாயம் அடைந்த பாலசுந்தர் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 5 பேரை மதுரவாயல் போலீசார் பிடித்துள்ளனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த 2017-ம் ஆண்டு ஒரு கும்பல் நாயுடு வெங்கடேசை வெட்டிக்கொல்ல முயன்றனர். அப்போது அவர் காயத்துடன் உயிர் தப்பி உள்ளார். இதன் பின்னர் வெங்கடேஷ்ஆந்திரா சென்று விட்டார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் மீண்டும் ஆலப்பாக்கம் பகுதிக்கு வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த எதிர்தரப்பு கோஷ்டியினர் வெங்கடேசை தீர்த்துகட்டி உள்ளனர்.

    இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×