என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரவாயல் வாலிபர் கொலையில் 5 பேர் சிக்கினர்
போரூர்:
மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம், ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் நாயுடு வெங்கடேஷ் (வயது 27). ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர் நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த நண்பர் பாலசுந்தருடன் மதுரவாயல் ஏகம்பரம் இன்டஸ்டீரியல் எஸ்டேட் ரோட்டில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் 2 பேரையும் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
வயிறு, கையில் படுகாயம் அடைந்த பாலசுந்தர் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 5 பேரை மதுரவாயல் போலீசார் பிடித்துள்ளனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 2017-ம் ஆண்டு ஒரு கும்பல் நாயுடு வெங்கடேசை வெட்டிக்கொல்ல முயன்றனர். அப்போது அவர் காயத்துடன் உயிர் தப்பி உள்ளார். இதன் பின்னர் வெங்கடேஷ்ஆந்திரா சென்று விட்டார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் மீண்டும் ஆலப்பாக்கம் பகுதிக்கு வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த எதிர்தரப்பு கோஷ்டியினர் வெங்கடேசை தீர்த்துகட்டி உள்ளனர்.
இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்