என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாப்பாரப்பட்டி அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்7 July 2019 4:23 PM GMT (Updated: 7 July 2019 4:23 PM GMT)
பாப்பாரப்பட்டி அருகே திருமணமாகி 5 வருடங்கள் ஆனநிலையில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவரிடம் சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை அடுத்த சுரக்காப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 25).
இவர்களுக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணமானாது. சுரேஷ் எந்த வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். சுரேஷ் தனது மனைவி கிருஷ்ணவேணியிடம் அவரது தாயார் வீட்டிற்கு சென்று பணம் வாங்கி கொண்டு வா என்று அடிக்கடி கூறி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த காணப்பட்ட கிருஷ்ண வேணி சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த போது தூக்குபோட்டு கொண்டார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவலறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமாகி 5 வருடங்கள் ஆனநிலையில் கிருஷ்ணவேணி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதால் அவரது கணவரிடம் சப்-கலெக்டர் சிவன்அருள் விசாரணை நடத்தி வருகின்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X