என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவையாறு அருகே கணவர் பேசாததால் புதுப்பெண் மாயம்
Byமாலை மலர்7 July 2019 11:23 AM GMT (Updated: 7 July 2019 11:23 AM GMT)
திருவையாறு அருகே கணவர் பேசாததால் புதுப்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவையாறு:
திருவையாறை அடுத்த ஆச்சனூரை சேர்ந்த சூசை மகன் ராபின்சன் என்பவருக்கும் திருச்சி மாவட்டம் சங்கிலாண்புரத்தை சேர்ந்த பாண்டியன் மகள் பிலோமினாள் (வயது20) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு ராபின்சன் வேலைக்காக சென்னை சென்றுவிட்டார். மனைவி மட்டும் ஆச்சனூரில் ராபின்சன் குடும்பத்தினருடன் வசித்துவந்தார்.
சென்னை சென்ற ராபின்சன் மனைவியுடன் சரியாக பேசாததால் விரக்தியடைந்த பிலோமினாள் கடந்த 1-ம் தேதி வீட்டிலிருந்து மாயமாகிவிட்டார். இது குறித்து பிலோமினாள் பெற்றோருக்கு தெரியப்படுத்தினர்.
இதையடுத்து திருச்சியிலிருந்து பிலோமினாளின் தாய் செந்தாமரை மருவூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து மாயமான பிலோமினாளை தேடிவருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X