search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது (கோப்பு படம்)
    X
    கைது (கோப்பு படம்)

    விருதுநகரில் வேலை வாங்கி தருவதாக ரூ.3½ லட்சம் மோசடி - சஸ்பெண்டு போலீஸ்காரர் கைது

    போலீஸ் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 3½ லட்சம் மோசடி செய்ததாக சஸ்பெண்டு போலீஸ்காரரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் சங்கரலிங்கா புரத்தைச் சேர்ந்தவர் கணே சன் (வயது 53). இவர் தனது மகன் மணிவேலை போலீஸ் வேலையில் சேர்க்க விரும் பினார்.

    அப்போது ஏ.புதுப் பட்டியைச் சேர்ந்த சஸ்பெண்டு போலீஸ் காரர் பாண்டியராஜ் அறிமுகம் கிடைத்தது. அவர் தனக்கு போலீசில் பலரையும் தெரியும் எனக் கூறியுள்ளார். இதனை நம்பி பல தவனைகளில் ரூ. 3½ லட்சத்தை கணேசன் கொடுத்துள்ளார்.

    ஆனால் வேலை எதையும் பாண்டியராஜ் வாங்கிக் கொடுக்கவில்லை. இதனால் பணத்தை திருப்பித் தரும்படி கணேசன் கேட்டார். ஆனால் பாண்டியராஜ் அதனை திருப்பித்தராமல் இழுத்தடித்தார்.

    இதனைத் தொடர்ந்து ஆமத்தூர் போலீசில் கணேசன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பாண்டியராஜை கைது செய்தனர். இவர் போலீஸ் பணியில் இருந்து 2008-ம் ஆண்டு பணி நீக்கம செய்யப்பட்டவர் ஆவர்.
    Next Story
    ×