என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நாகர்கோவிலில் பெண்ணை கத்தியால் குத்தி 5½ பவுன் நகை பறிப்பு
நாகர்கோவில்:
நாகர்கோவில் மேலராமன்புதூர் அதி மிக்கேல் தெருவைச் சேர்ந்தவர் ஜெலஸ்டின் சுபாஷ். இவர், கேரளாவில் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி தங்கராணி, (வயது 39). இவர்களுக்கு ராஜேஷ் (12) என்ற மகனும், ஹரிதா (10 என்ற மகளும் உள்ளனர். ஜெலஸ்டின் சுபாஷ் கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் ஊருக்கு வந்து விட்டு கேரளாவிற்கு சென்றார். வீட்டில் தங்கராணி குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
நேற்றிரவு வழக்கம்போல் சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றனர். இன்று அதிகாலை வீட்டின் முன்பக்க கதவு வழியாக உள்ளே புகுந்த கொள்ளையன், தங்கராணியின் கழுத்தில் கிடந்த 5½ பவுன் நகையை பறித்தார். திடுக்கிட்டுஎழுந்த தங்கராணி கொள்ளையனுடன் கடுமையாக போராடினார்.
ஆனால் கொள்ளையன் தங்கராணியை கத்தியால் குத்தியதுடன் கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். இதில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து தங்கராணி கூச்சலிட்டார். அதற்குள் கொள்ளையன் 5½ பவுன் நகையுடன் தப்பி ஓடி விட்டார்.
கொள்ளையனுடன் போராடியதில் தங்கராணி மயக்கம் அடைந்தார். இதையடுத்து அவரது குழந்தைகள் உறவினர்கள் உதவியுடன் தாயாரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் தங்கராணி உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து நேசமணி நகர் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவின் காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்