search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    நாகர்கோவிலில் பெண்ணை கத்தியால் குத்தி 5½ பவுன் நகை பறிப்பு

    நாகர்கோவிலில் வீடு புகுந்து பெண்ணை கத்தியால் குத்தி 5½ பவுன் நகையை கொள்ளையன் பறித்து சென்றான்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மேலராமன்புதூர் அதி மிக்கேல் தெருவைச் சேர்ந்தவர் ஜெலஸ்டின் சுபாஷ். இவர், கேரளாவில் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி தங்கராணி, (வயது 39). இவர்களுக்கு ராஜேஷ் (12) என்ற மகனும், ஹரிதா (10 என்ற மகளும் உள்ளனர். ஜெலஸ்டின் சுபாஷ் கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் ஊருக்கு வந்து விட்டு கேரளாவிற்கு சென்றார். வீட்டில் தங்கராணி குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    நேற்றிரவு வழக்கம்போல் சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றனர். இன்று அதிகாலை வீட்டின் முன்பக்க கதவு வழியாக உள்ளே புகுந்த கொள்ளையன், தங்கராணியின் கழுத்தில் கிடந்த 5½ பவுன் நகையை பறித்தார். திடுக்கிட்டுஎழுந்த தங்கராணி கொள்ளையனுடன் கடுமையாக போராடினார்.

    ஆனால் கொள்ளையன் தங்கராணியை கத்தியால் குத்தியதுடன் கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். இதில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து தங்கராணி கூச்சலிட்டார். அதற்குள் கொள்ளையன் 5½ பவுன் நகையுடன் தப்பி ஓடி விட்டார்.

    கொள்ளையனுடன் போராடியதில் தங்கராணி மயக்கம் அடைந்தார். இதையடுத்து அவரது குழந்தைகள் உறவினர்கள் உதவியுடன் தாயாரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் தங்கராணி உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து நேசமணி நகர் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவின் காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×