என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாநிலங்களவை தேர்தல்: வைகோ- திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
Byமாலை மலர்6 July 2019 5:50 AM GMT (Updated: 6 July 2019 5:50 AM GMT)
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
சென்னை:
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காலியாகும் 6 இடங்களுக்கான தேர்தல் வருகிற 18-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தற்போது உள்ள உறுப்பினர்களின் அடிப்படையில், திமுக மற்றும் அதிமுக தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும்.
இதில், திமுக தரப்பில் சண்முகம், வில்சன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒரு இடம் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அந்த உறுப்பினர் பதவிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்ய 8-ம் தேதி கடைசி நாள் ஆகும்.
இதற்கிடையே தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, அவர் இந்த தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்படலாம் என கருதப்பட்டது. ஆனால், அவர் போட்டியிடுவதற்கு சட்டசிக்கல் என சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.
முன்னதாக வேட்பு மனு தாக்கலுக்கு புறப்பட்ட வைகோ செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழகத்தின் வாழ்வாதாரங்கள் மற்றும் திராவிட லட்சியங்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்க முடியாது என்றும் வைகோ கூறினார்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காலியாகும் 6 இடங்களுக்கான தேர்தல் வருகிற 18-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தற்போது உள்ள உறுப்பினர்களின் அடிப்படையில், திமுக மற்றும் அதிமுக தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும்.
இதில், திமுக தரப்பில் சண்முகம், வில்சன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒரு இடம் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அந்த உறுப்பினர் பதவிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்ய 8-ம் தேதி கடைசி நாள் ஆகும்.
இதற்கிடையே தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, அவர் இந்த தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்படலாம் என கருதப்பட்டது. ஆனால், அவர் போட்டியிடுவதற்கு சட்டசிக்கல் என சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காலை 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டப்பேரவை செயலாளர் சீனிவசனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
முன்னதாக வேட்பு மனு தாக்கலுக்கு புறப்பட்ட வைகோ செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழகத்தின் வாழ்வாதாரங்கள் மற்றும் திராவிட லட்சியங்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்க முடியாது என்றும் வைகோ கூறினார்.
இதேபோல் திமுக வேட்பாளர்களான சண்முகம், வில்சன் ஆகியோரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சி நிர்வாகிகள் கனிமொழி, துரைமுருகன், டிஆர் பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X