என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தை விட்டு வைகோவை வெளியேற்ற வேண்டும்- மன்னார்குடி ஜீயர் ஆவேசம்
Byமாலை மலர்6 July 2019 5:48 AM GMT (Updated: 6 July 2019 5:48 AM GMT)
தேசத்துரோக வழக்கில் குற்றவாளி என தெரிவித்துள்ள வைகோவை தமிழகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் தெரிவித்துளார்.
பழனி:
பழனி குபேரபட்டினத்தில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் கலந்துகொண்டு பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, பேனா உள்ளிட்டவற்றை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே கல்வியுடன் சேர்த்து ஆன்மீகம், தேசப்பற்று குறித்து போதிக்க வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பார்கள் என்றார்.
தேசத்துரோக வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள வைகோ எப்போதுமே தேசத்தை துண்டாடும் கருத்துக்களை தெரிவிப்பவர். தற்போது அவர் தேசத்துரோகி என்ற உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவரை தமிழகத்தை விட்டே வெளியேற்றும் பணியை தேசப்பற்றாளர்கள் ஒவ்வொருவரும் இனி மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல் இந்துசமய அறநிலையத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் பச்சையப்பன் போன்ற அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமிரபரணி புஷ்கரணி நடத்தியது போல பழனி சண்முகநதியிலும் விழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தேவையான உதவிகளை செய்ய இந்து அமைப்புகள், சமூகநல அமைப்புகள் தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பழனி குபேரபட்டினத்தில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் கலந்துகொண்டு பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, பேனா உள்ளிட்டவற்றை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே கல்வியுடன் சேர்த்து ஆன்மீகம், தேசப்பற்று குறித்து போதிக்க வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பார்கள் என்றார்.
அதன் பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தேசத்துரோக வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள வைகோ எப்போதுமே தேசத்தை துண்டாடும் கருத்துக்களை தெரிவிப்பவர். தற்போது அவர் தேசத்துரோகி என்ற உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவரை தமிழகத்தை விட்டே வெளியேற்றும் பணியை தேசப்பற்றாளர்கள் ஒவ்வொருவரும் இனி மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல் இந்துசமய அறநிலையத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் பச்சையப்பன் போன்ற அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமிரபரணி புஷ்கரணி நடத்தியது போல பழனி சண்முகநதியிலும் விழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தேவையான உதவிகளை செய்ய இந்து அமைப்புகள், சமூகநல அமைப்புகள் தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X