search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளம்பெண் கொலை
    X
    இளம்பெண் கொலை

    பரமக்குடி அருகே கழுத்தை நெரித்து இளம்பெண் கொலை- கணவருக்கு வலைவீச்சு

    குடும்ப பிரச்சினையில் இளம்பெண்ணை கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை அடுத்துள்ள சத்திரக்குடி போலீஸ் சரகத்துக்குட்பட்ட சின்ன நாகாச்சி கிராமத்தை சேர்ந்தவர் சந்தியராஜ் (வயது 33), கூலி தொழிலாளி. இவரது மனைவி சிவகாமி(23), இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களாக சந்தியராஜ் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

    இதனால் விரக்தி யடைந்த சிவகாமி தனது குழந்தைகளுடன் அருகில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த செயலால் ராஜாவுக்கு மேலும் ஆத்திரமூட்டியது. மாமியார் வீட்டுக்கு சென்ற சந்தியராஜ் சிவகாமியிடம் தகராறு செய்தார்.

    நேற்று இரவு சிவகாமி மட்டும் தனது தாய் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த சந்தியராஜ் மீண்டும் மனைவியிடம் பிரச்சினை செய்தார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சந்தியராஜ், கயிற்றால் சிவகாமியின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

    இன்று காலை வீட்டில் சிவகாமி பிணமாக கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சத்திரக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் மனைவியை கொன்ற சந்தியராஜை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×