என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பரமக்குடி அருகே கழுத்தை நெரித்து இளம்பெண் கொலை- கணவருக்கு வலைவீச்சு
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை அடுத்துள்ள சத்திரக்குடி போலீஸ் சரகத்துக்குட்பட்ட சின்ன நாகாச்சி கிராமத்தை சேர்ந்தவர் சந்தியராஜ் (வயது 33), கூலி தொழிலாளி. இவரது மனைவி சிவகாமி(23), இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக சந்தியராஜ் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இதனால் விரக்தி யடைந்த சிவகாமி தனது குழந்தைகளுடன் அருகில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த செயலால் ராஜாவுக்கு மேலும் ஆத்திரமூட்டியது. மாமியார் வீட்டுக்கு சென்ற சந்தியராஜ் சிவகாமியிடம் தகராறு செய்தார்.
நேற்று இரவு சிவகாமி மட்டும் தனது தாய் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த சந்தியராஜ் மீண்டும் மனைவியிடம் பிரச்சினை செய்தார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சந்தியராஜ், கயிற்றால் சிவகாமியின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.
இன்று காலை வீட்டில் சிவகாமி பிணமாக கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சத்திரக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் மனைவியை கொன்ற சந்தியராஜை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்