search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட கள்ளக்காதல் ஜோடி லோகநாதன், சுதா.
    X
    கைது செய்யப்பட்ட கள்ளக்காதல் ஜோடி லோகநாதன், சுதா.

    திருப்பூரில் மோட்டார் சைக்கிள் திருடி உல்லாச வாழ்க்கை நடத்திய கள்ளக்காதல் ஜோடி

    திருப்பூரில் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிள்களை திருடி உல்லாச வாழ்க்கை நடத்திய கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் தெற்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருட்டு போவதாக போலீசில் புகார்கள் வந்தன. இதனையடுத்து சப்-இன்ஸ் பெக்டர் அண்ணாதுரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ரோந்து மற்றும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ஒரு இளம்பெண்ணும், ஒரு வாலிபரும் தனித்தனி மொபட்டில் வந்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை நிறுத்தி விசாரணை செய்தனர். விசாரணையில் நாங்கள் கணவன்- மனைவி. பனியன் கம்பெனியில் வேலை முடிந்து வீட்டுக்கு செல்கிறோம் என்று கூறினர். சந்தேகம் தீராக போலீசார் இருவரையும் தனித்தனியே விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கள்ளக்காதலர்கள் என்பது தெரியவந்தது. தீவிர விசாரணையில் ஓட்டி வந்த ஒரு மொபட் திருட்டு வண்டி என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் பி.கே.ஆர். காலனியை சேர்ந்த லோகநாதன் (வயது 47), கல்லாங்காட்டை சேர்ந்த சுதா (36) ஆகியோர் என்பது தெரியவந்தது. ஒரே வீட்டில் வசிக்கும் கள்ளக்காதல் ஜோடி பகல் நேரங்களில் சந்தேகம் வராதபடி கிடைக்கும் வேலைக்கு சென்று வந்தனர். இரவு நேரங்களில் ஒரு மொபட்டில் இருவரும் செல்வார்கள். மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு தனித்தனி வண்டிகளில் வீடு திரும்பி விடுவார்கள். பெண்ணுடன் வருவதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்படாமல் பார்த்துக்கொண்டனர்.

    திருடிய மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தனர் என்பது தெரியவந்தது. அவர்கள் பதுக்கி வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த 6 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். கள்ளக்காத ஜோடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×