என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
படிப்பை தொடர முடியாததால் தஞ்சை கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்2 July 2019 5:07 PM GMT (Updated: 2 July 2019 5:07 PM GMT)
தஞ்சை அருகே படிப்பை தொடர முடியாததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை கோரி குளம் துளசிராமன் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). கூலி தொழிலாளி. இவரது மகள் கீர்த்திகா (18). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி திறக்கப்பட்டது. ஆனால் போதிய வருமானம் இல்லாததாலும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும் கீர்த்திகாவை பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு தொடர ரமேசால் கல்லூரிக்கு அனுப்ப முடியவில்லை. இதை அவர் தனது மகளிடம் கூறினார்.
இதைக் கேட்டு கீர்த்திகா மிகுந்த மனவேதனை அடைந்தார். ஏழ்மை காரணமாக தன்னால் மேல்படிப்பு படிக்க முடியவில்லையே என மனமுடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கீர்த்திகா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது தாய் ஜெயலட்சுமி தஞ்சை கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தஞ்சை கோரி குளம் துளசிராமன் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). கூலி தொழிலாளி. இவரது மகள் கீர்த்திகா (18). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி திறக்கப்பட்டது. ஆனால் போதிய வருமானம் இல்லாததாலும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும் கீர்த்திகாவை பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு தொடர ரமேசால் கல்லூரிக்கு அனுப்ப முடியவில்லை. இதை அவர் தனது மகளிடம் கூறினார்.
இதைக் கேட்டு கீர்த்திகா மிகுந்த மனவேதனை அடைந்தார். ஏழ்மை காரணமாக தன்னால் மேல்படிப்பு படிக்க முடியவில்லையே என மனமுடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கீர்த்திகா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது தாய் ஜெயலட்சுமி தஞ்சை கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X