search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுகவின் ஏமாற்று வேலைகளை மக்கள் நம்ப மாட்டார்கள்: பொன் ராதாகிருஷ்ணன்
    X

    திமுகவின் ஏமாற்று வேலைகளை மக்கள் நம்ப மாட்டார்கள்: பொன் ராதாகிருஷ்ணன்

    தி.மு.க.வின் ஏமாற்று வேலைகளை மக்கள் நம்ப மாட்டார்கள். தமிழக மக்கள் விழிப்படைய தொடங்கி விட்டனர் என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
    சென்னை :

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக பல பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. இதற்கு அடிப்படையாக இருப்பது தி.மு.க. சுகாதாரத்துறை பின்னுக்கு சென்றதற்கு அரசை மட்டும் குறை சொல்லாமல் தி.மு.க.வும் சேர்ந்து பொறுப்பு ஏற்க வேண்டும். ஒவ்வொரு விஷயத்திலும் வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் வேறு யாரோ? என்பது போல் போராடுகின்றனர். தி.மு.க.வின் ஏமாற்று வேலைகள் இனி நடக்காது. மக்கள் நம்ப மாட்டார்கள். தமிழக மக்கள் விழிப்படைய தொடங்கி விட்டனர்.

    கூடங்குளத்தில் அணு விஞ்ஞானிகள் ஆலோசித்து முடிவு எடுக்கின்றனர். ஆனால் அயல்நாட்டு கைக்கூலிகள் சிலர் விஞ்ஞானிகளாக மாறுவதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். எந்தவொரு விஷயத்திற்கும் எதிர்ப்பு தெரிவிப்பதாக இருந்தால் எந்த முறைப்படி செய்கிறீர்கள்?. இதை மாற்றி கொள்ள வேண்டும். தமிழகம் முன்னோக்கி செல்ல வேண்டும்.



    அணுக்கழிவுகளால் பாதிப்பு ஏற்படும் என்றால் எந்த காரணத்தை கொண்டும் கூடங்குளத்தில் அரசு அமைத்திருக்காது. அந்த நிறுவனமும் ஒப்புக்கொள்ளாது. கர்நாடகாவில் எதிர்ப்பு தெரிவிப்பது யார்?. கூடங்குளத்தில் அணு உலையை தொடங்கலாம் என்று கூறியவர் அப்துல்கலாம்.

    ஆனால் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த அரசியல் விஞ்ஞானி, ஆட்சிக்கு வர கலவரத்தை ஏற்படுத்துவது எப்படி?, தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லவிடாமல் தடுப்பதற்காக ஒரு கூட்டம் உள்ளது. இந்த கூட்டம் கூடிய விரைவில் அடையாளம் காட்டப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×