search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல் - பெண் சிகிச்சை பலனின்றி பலி
    X

    மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல் - பெண் சிகிச்சை பலனின்றி பலி

    முசிறி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் பலியானார்.
    குளித்தலை:

    முசிறி அருகே உள்ள குணசீலம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்நாத் (வயது 19). இவர் திருச்சி திருவானைக்காவலில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பிரேம்நாத் தனது தாய் பிரேமாவை (40), மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு குளித்தலை மலையப்பநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார்.

    குளித்தலை அருகே உள்ள மருதூர் பிரிவு சாலையில் திரும்பும்போது, அதே சாலையில் கோவையில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பிரேம்நாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த பிரேமா திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பிரேமா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×