என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சியில் மாணவி உள்பட 2 பேர் மாயம்
Byமாலை மலர்27 Jun 2019 2:49 PM GMT
திருச்சியில் மாணவி உள்பட 2 பேர் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் 2 பேரை தேடி வருகிறார்கள்.
திருச்சி:
திருச்சி பீமநகர் மார்சிங் பேட்டையை சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மகள் பிரியங்கா (17). இவர் வீட்டில் இருந்தபடி 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 25-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பிரியங்கா அதன் பிறகு வீடு திரும்பவில்லை. நல்லதம்பி பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். பிரியங்கா காதல் பிரச்சினையில் வீட்டை விட்டு சென்றாரா? அல்லது வேறு காரணமா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சேலம் மாவட்டம் சாரங்கபட்டி மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி மகேஸ்வரி (59). இவர்கள் 2 பேரும் கடந்த 1 வாரத்திற்கு முன்பு சாமி கும்பிட ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவிலை சுற்றி பார்த்தனர். அப்போது திடீரென சேகரை காணவில்லை. மகேஸ்வரி பல இடங்களில் தேடியும் சேகரை கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சேகரை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X