search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
    X

    தூத்துக்குடியில் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

    தூத்துக்குடி மாநகராட்சியில் வரி உயர்வை கண்டித்தும், மாநகரில் தண்ணீர் விநியோகத்தை தனியாரிடம் வழங்கும் முறையை கண்டித்தும் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் சிவன்கோவில் தேரடி திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் நடேஷ்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை முன்னாள் எம்.எல்.ஏ. டேனியல்ராஜ் தொடங்கி வைத்தார். 

    இதில் தூத்துக்குடி மாநகராட்சியில் வரி உயர்வை கண்டித்தும், மாநகரில் தண்ணீர் விநியோகத்தை தனியாரிடம் வழங்கும் முறையை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். முடிவில் மாநகர துணைத் தலைவர் ஜெயமணி சுரேஷ் நன்றி கூறினார். ஆர்பாட்டத்தில் வக்கீல் சுப்பிரமணிய ஆதித்தன், ராஜு, அருள், ஜெயக்குமார், வில்பிரட், சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×