என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
போடி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேர் கைது
மேலசொக்கநாதபுரம்:
போடி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் தலைமையிலான போலீசார் நந்தவனம் காளியம்மன் கோவில் தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டு இருந்த லெட்சுமி (வயது 65) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர் கடந்த 40 வருடமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல 7-வது வார்டு பகுதியில் மாவூத்து கருப்பையா (32) என்பவர் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தார்.
போலீசார் அவரையும் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
போடி பகுதியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து இவர்கள் 2 பேரும் பல வருடங்களாக கஞ்சா விற்று வருகின்றனர்.
பல மாணவர்கள் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையாகி மன நிலை பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே போலீசார் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்