என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை
ராமேசுவரம்:
ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர். இவர்களில் ஒரு தரப்பினர் இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ரோந்து கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களிடம் இங்கு வந்து மீன்பிடிக்க அனுமதியில்லை என எச்சரித்தனர்.
திடீரென்று மீனவர்களின் படகுகளுக்குள் ஏறி அவர்களை தாக்கினர். மேலும் படகில் இருந்த மீன்பிடி வலைகள் மோட்டார்கள், மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தினர்.
பின்னர் அங்கிருந்து செல்லுமாறு மீனவர்களை விரட்டியடித்தனர். இதனால் உயிருக்கு பயந்த மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பினர்.
இதுகுறித்து கரை திரும்பிய மீனவர்கள் கூறுகையில் தடைகாலம் முடிந்து தற்போது தான் மீன்பிடி தொழில் செய்து வருகிறோம். ஆனால் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து இடையூறு செய்து வருகிறார்கள். இலங்கை கடற்படை தாக்குதலால் மீன் பிடிப்பதை பாதியிலேயே விட்டுவிட்டு கரை திரும்பியுள்ளோம்.
இதனால் எங்களுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண வில்லை என்றால் எங்கள் வாழ்வாதாரம் கோள்விக்குறியாகி விடும் சூழல் ஏற்பட்டுள்ளது என கவலையுடன் தெரிவித்தனர்.
இந்த நிலையில் எல்லை தாண்டி வந்ததாக கூறி 4 ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்