என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மெரினாவில் விற்கும் தண்ணீரை குடிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்
Byமாலை மலர்27 Jun 2019 5:48 AM GMT (Updated: 27 Jun 2019 5:48 AM GMT)
மெரினா கடற்கரையோரம் விற்கும் தண்ணீரை குடிக்க வேண்டாம் என்று சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னை:
சென்னை நகரில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நிலத்தடி நீரும் குறைந்து விட்டதால் தண்ணீருக்காக மக்கள் காலி குடங்களுடன் அலைகிறார்கள்.
தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க சென்னை குடிநீர் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
லாரிகளில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தெரு குழாய்களில் தண்ணீர் அனுப்பப்படுகிறது.
மெரினா கடற்கரையோரம் உள்ள மணல் பரப்பில் தோண்டினால் சில அடி ஆழத்தில் உப்பு இல்லாத தண்ணீர் கிடைக்கும். இதையடுத்து கடற்கரை மணல் பரப்பில் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 6 போர்வெல் அமைக்கப்பட்டு அதில் அடிபம்பு பொருத்தப்பட்டு உள்ளது.
இதில் நொச்சிக்குப்பம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட கடற்கரையோரம் உள்ள பொதுமக்கள், பம்ப்பில் இருந்து தண்ணீர் எடுத்து செல்கிறார்கள். வரிசையில் நின்று குடங்களில் பிடித்து ஆட்டோக்களில் ஏற்றி வீடுகளுக்கு கொண்டு செல்கிறார்கள்.
உப்பில்லாத இந்த தண்ணீரை அவர்கள் குடிக்க, குளிக்க மற்றும் துணி துவைக்க பயன்படுத்துகிறார்கள்.
இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறும்போது, அடி பம்ப்பில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் நல்ல தெளிவாகவும், முற்றிலும் உப்பில்லாமலும் இருக்கிறது. அந்த தண்ணீரை துணியை வைத்து வடிகட்டி குடிக்க பயன்படுத்தி வருகிறோம்.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனர் ஹரிகரன் கூறியதாவது:-
மெரினா கடற்கரையோரம் உள்ள போர்வெல்களில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் குடிநீர் வாரியத்தின் பரிசோதனை கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
அந்த தண்ணீர் குடிநீராக பயன்படுத்த ஏற்றதல்ல என்பது தெரிய வந்தது. அதில் குடிநீருக்கான திடப்பொருள் குறைவாக உள்ளது. ஆனால் அந்த தண்ணீரை குளிக்கவும், துணி துவைக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
குடிநீருக்காக பயன்படுத்தப்படும் குழாய்களில் வினியோகம் செய்யப்படுகிறது. மெரினாவில் போர்வெல் தண்ணீரை குடிக்க வேண்டாம் என்று அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என்றார்.
சென்னை நகரில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நிலத்தடி நீரும் குறைந்து விட்டதால் தண்ணீருக்காக மக்கள் காலி குடங்களுடன் அலைகிறார்கள்.
தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க சென்னை குடிநீர் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
லாரிகளில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தெரு குழாய்களில் தண்ணீர் அனுப்பப்படுகிறது.
மெரினா கடற்கரையோரம் உள்ள மணல் பரப்பில் தோண்டினால் சில அடி ஆழத்தில் உப்பு இல்லாத தண்ணீர் கிடைக்கும். இதையடுத்து கடற்கரை மணல் பரப்பில் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 6 போர்வெல் அமைக்கப்பட்டு அதில் அடிபம்பு பொருத்தப்பட்டு உள்ளது.
இதில் நொச்சிக்குப்பம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட கடற்கரையோரம் உள்ள பொதுமக்கள், பம்ப்பில் இருந்து தண்ணீர் எடுத்து செல்கிறார்கள். வரிசையில் நின்று குடங்களில் பிடித்து ஆட்டோக்களில் ஏற்றி வீடுகளுக்கு கொண்டு செல்கிறார்கள்.
உப்பில்லாத இந்த தண்ணீரை அவர்கள் குடிக்க, குளிக்க மற்றும் துணி துவைக்க பயன்படுத்துகிறார்கள்.
இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறும்போது, அடி பம்ப்பில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் நல்ல தெளிவாகவும், முற்றிலும் உப்பில்லாமலும் இருக்கிறது. அந்த தண்ணீரை துணியை வைத்து வடிகட்டி குடிக்க பயன்படுத்தி வருகிறோம்.
இந்த நிலையில் மெரினா கடற்கரையோரம் உள்ள போர்வெல் அடி பம்ப்களில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை குடிக்க வேண்டாம் என்று சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனர் ஹரிகரன் கூறியதாவது:-
மெரினா கடற்கரையோரம் உள்ள போர்வெல்களில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் குடிநீர் வாரியத்தின் பரிசோதனை கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
அந்த தண்ணீர் குடிநீராக பயன்படுத்த ஏற்றதல்ல என்பது தெரிய வந்தது. அதில் குடிநீருக்கான திடப்பொருள் குறைவாக உள்ளது. ஆனால் அந்த தண்ணீரை குளிக்கவும், துணி துவைக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
குடிநீருக்காக பயன்படுத்தப்படும் குழாய்களில் வினியோகம் செய்யப்படுகிறது. மெரினாவில் போர்வெல் தண்ணீரை குடிக்க வேண்டாம் என்று அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X