என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எக்ஸ்பிரஸ் ரெயில் வேகம் அதிகரிப்பு: சென்னை-மதுரை பயண நேரம் குறைகிறது
Byமாலை மலர்26 Jun 2019 6:49 AM GMT (Updated: 26 Jun 2019 6:49 AM GMT)
சென்னை-மதுரை இடையே சுமார் 10 ரெயில்கள் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளன. தெற்கு ரெயில்வேயின் புதிய கால அட்டவணை நடைமுறைக்கு வரும்போது எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 5 முதல் 30 நிமிடம் வரை பயண நேரம் குறைய உள்ளது.
சென்னை:
தெற்கு ரெயில்வேயின் புதிய கால அட்டவணை வருகிற 1-ந்தேதி வெளியிடப்படுகிறது. இதில் சென்னை - மதுரை இடையே சுமார் 10 ரெயில்கள் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளன.
புதிய கால அட்டவணை நடைமுறைக்கு வரும்போது எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 5 முதல் 30 நிமிடம் வரை பயண நேரம் குறைய உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் இடத்தை அடையும் நோக்கத்திலும், தாமதமாக செல்வதை தவிர்க்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது சென்னை-மதுரை இடையே 495 கி.மீ. தூரத்தை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் 8 மணி 5 நிமிடங்களிலும், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் 8 மணி 20 நிமிடங்களிலும் அடைகிறது.
சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் 20 நிமிடங்கள் முன்னதாகவும், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 10 நிமிடங்கள் முன்னதாகவும் சென்றடையும் வகையில் வேகப்படுத்தப்படுகிறது. நெல்லை எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 5 நிமிடங்கள் பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் வருகிற 1-ந்தேதி முதல் மாற்றம் செய்யப்பட உள்ளது. நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 7.50 மணிக்கும், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 8.10 மணிக்கும் புறப்படும்.
சென்னை-மதுரை இடையே இரட்டை பாதையுடன் மின்மயமாக்கல் முடிந்து சுமார் 15 மாதங்களுக்கு பிறகு ரெயில் நேரம் குறைய உள்ளது.
தெற்கு ரெயில்வேயின் புதிய கால அட்டவணை வருகிற 1-ந்தேதி வெளியிடப்படுகிறது. இதில் சென்னை - மதுரை இடையே சுமார் 10 ரெயில்கள் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளன.
புதிய கால அட்டவணை நடைமுறைக்கு வரும்போது எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 5 முதல் 30 நிமிடம் வரை பயண நேரம் குறைய உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் இடத்தை அடையும் நோக்கத்திலும், தாமதமாக செல்வதை தவிர்க்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய கால அட்டவணைப்படி சென்னை-மதுரை இடையே பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவற்றின் பயண நேரம் 7 மணி 50 நிமிடங்களாக குறைக்கப்பட உள்ளது.
தற்போது சென்னை-மதுரை இடையே 495 கி.மீ. தூரத்தை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் 8 மணி 5 நிமிடங்களிலும், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் 8 மணி 20 நிமிடங்களிலும் அடைகிறது.
சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் 20 நிமிடங்கள் முன்னதாகவும், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 10 நிமிடங்கள் முன்னதாகவும் சென்றடையும் வகையில் வேகப்படுத்தப்படுகிறது. நெல்லை எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 5 நிமிடங்கள் பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் வருகிற 1-ந்தேதி முதல் மாற்றம் செய்யப்பட உள்ளது. நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 7.50 மணிக்கும், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 8.10 மணிக்கும் புறப்படும்.
சென்னை-மதுரை இடையே இரட்டை பாதையுடன் மின்மயமாக்கல் முடிந்து சுமார் 15 மாதங்களுக்கு பிறகு ரெயில் நேரம் குறைய உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X