search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 28-ந்தேதி நடக்கிறது
    X

    மதுரையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 28-ந்தேதி நடக்கிறது

    மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகமும், தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு கிளை அலுவலகமும் இணைந்து நடத்தும் வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 28-ந் தேதி நடைபெற உள்ளது.
    மதுரை:

    தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் வேலை நாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டு வருகிறது.

    மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகமும், தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு கிளை அலுவலகமும் இணைந்து நடத்தும் வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 28-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை நாடும் இளைஞர்களின் கல்வித் தகுதிக்கேற்ப ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலை நாடுநர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக்கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலை நாடுநர்கள் கல்விச்சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் வருகிற 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு மதுரை புதூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து கலந்து கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவதனால் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது என்று மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் மகாலெட்சுமி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×