என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் வரதட்சணை கொடுமை- கணவர் கைது
Byமாலை மலர்25 Jun 2019 10:54 AM GMT (Updated: 25 Jun 2019 10:54 AM GMT)
கோவை மேட்டுப்பாளையம் அருகே வரதட்சணை கேட்டு கொடுமைப்பத்தியதாக மனைவி அளித்த புகாரின் பேரில் கணவரை போலீசார் கைது செய்தனர்.
கவுண்டம்பாளையம்:
கோவை மேட்டுப்பாளையம் அருகிலுள்ள சிறுமுகை எஸ்.ஆர்.எஸ். நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி நர்மதா (வயது 22). இவர் துடியலூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியதாவது:-
எனக்கு கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 60 பவுன் நகை மற்றும் சீர்வரிசைகள் கொடுக்கப்பட்டன. புதிய தொழில் தொடங்குவதாகவும், வெளிநாடு செல்வதாகவும் எனது கணவர் கூறினார். ஆனால் கூறியபடி நடக்கவில்லை.
இந்த நிலையில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. விஜயகுமார் கூடுதல் வரதட்ணை கேட்டு என்னை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றினார். எனவே அவர் மீதும், உடந்தையாக உள்ளவர்கள் மீதும்உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் கூறியிருந்தார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை வழக்குப்பதிவு செய்து விஜயகுமார் (34) மற்றும் அவரது தாய் செல்வி (52) அவரது தாய்மாமன் ரமேஷ் (42) ஆகிய 3 பேர் மீது பெண் வன்கொடுமை சட்டம் உள்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கணவர் விஜயகுமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை மேட்டுப்பாளையம் அருகிலுள்ள சிறுமுகை எஸ்.ஆர்.எஸ். நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி நர்மதா (வயது 22). இவர் துடியலூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியதாவது:-
எனக்கு கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 60 பவுன் நகை மற்றும் சீர்வரிசைகள் கொடுக்கப்பட்டன. புதிய தொழில் தொடங்குவதாகவும், வெளிநாடு செல்வதாகவும் எனது கணவர் கூறினார். ஆனால் கூறியபடி நடக்கவில்லை.
இந்த நிலையில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. விஜயகுமார் கூடுதல் வரதட்ணை கேட்டு என்னை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றினார். எனவே அவர் மீதும், உடந்தையாக உள்ளவர்கள் மீதும்உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் கூறியிருந்தார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை வழக்குப்பதிவு செய்து விஜயகுமார் (34) மற்றும் அவரது தாய் செல்வி (52) அவரது தாய்மாமன் ரமேஷ் (42) ஆகிய 3 பேர் மீது பெண் வன்கொடுமை சட்டம் உள்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கணவர் விஜயகுமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X